Monday, December 31, 2012

ராஜாவால் அடையாளம் பெற்றவர்கள்


ராஜாவின் இசையால் பிரபலமடைந்த முகங்கள் பற்றிய பதிவு இது. அஃதாவது ஒரே ஒரு பாடலின் மூலம் இவர்கள் இன்று வரை ரசிகர்கள் மனதில் நிலைத்து நிற்கிறார்கள். வானொலியில், ஒலி பேழைகளில் சில பாடல்கள் கேட்கும்போது உடனே இவர்கள் முகம் நினைவுக்கு வரும். அதற்கு காரணம் நம்முடைய ராஜாவின் காலத்தால் அழியாத பாடல்கள் தாம். ஒரு பெரிய நடிகருக்கு, நடிகைக்கு அருமையான பாடல்கள் வாய்ப்பதில் ஏதும் வியப்பில்லை, ஆனால் நகைச்சுவை நடிகருக்கோ, குணச்சித்திர நடிகருக்கோ அவ்வாறு அமைந்தால் அது அவர்களின் பாக்கியமே! பெரிய பேனர் இயக்குனர்/தயாரிப்பு நிறுவனம், புகழ் பெற்ற நடிக/நடிகையர் இருந்தால் மட்டுமே ஒத்துக்கொள்ளும் இசையமைப்பாளர்கள்(அறிமுக இசையமைப்பாளர்களும் சேர்த்தி) மத்தியில் ராஜா புதியவர்களுக்கு ஒரு விலாசத்தை கொடுத்தார் என்பது உலகறிந்த சேதி. அப்புதியவர்கள் படங்களில் இடம்பெறும் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்த நடிகர்கள்  மக்கள் மனதில் நிலைத்து நிற்கும் வண்ணம் பாடல்களை தந்தவர் நம்முடைய இசை ஞானி.
கண்மலர்களின் அழைப்பதிழ் மற்றும் தீர்த்தக் கரை தனிலே

 என்ற பாடல்களில் மூலம் சக்கரவர்த்தி இன்று வரை அறியப்படுகிறார்.
கம்பர் ஜெயராமன்(திரைப்பட மற்றும் சின்னத்திரை நடிகர்) சித்திரை செவ்வானம் சிரிக்க கண்டேன் பாடல் மூலம் பிரபலம்.(படகோட்டுபவர்)

 ராஜிவ் உறங்காத நினைவுகள் படத்தில் வரும் மெளனமே பாடலில் நன்கு அறிமுகம் ஆகிறார். நிழல் தேடும் நெஞ்சங்கள் படத்தில் வரும் இது கனவுகள் விளைந்திடும் காலம் பாடலும் மிக பிரபலம். 

பானுசந்தருக்கு ஓ வசந்த ராஜா

 சுமனுக்கு என்றென்றும் ஆனந்தமே

 பிரதாப் போத்தன் என்றால் உடனே நினைவுக்கு வரும் என் இனிய பொன் நிலாவே என்று அடுக்கிக் கொண்டே போகலாம்.

 மேலும் இப்போது தொலைக்காட்சி தொடர்களில் அதிகம் நடிக்கும் ராஜசேகருக்கு சூப்பர் ஹிட்டாக அமைந்தது ”இது ஒரு பொன்மாலை பொழுது”

 நாடகங்களில் இப்போது பிரபலமாக இருக்கும் மற்றொரு பரிச்சிய முகமான அபிஷேக்குக்கு மோக முள் பாடல்கள் ஒரு முகவரியாக இருக்கிறது.

 ஜீப் ஓட்டிக்கொண்டே பாடும் பாடல் என்றால் சட்டென்று நினைவுக்கு வருகிறார் சரத்பாபு செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல் மூலம்.

 சின்ன புறா ஒன்று என்றதும் தேங்காய் சீனிவாசன் தெரிகிறார்.

 பூவே செம்பூவே பாடலில் ராதாரவிக்கு கிடைத்த அடையாளம் பல ஆயிரம் படங்களில் நடித்ததற்கு சமானம்.

சிவச்சந்திரன் எத்தனை படங்களில் நடித்திருக்கிறார்/இயக்கி இருக்கார் என்றால் யாருக்கும் தெரியாது, ஆனால் அவர் முகம் மக்களுக்கு பரிச்சியமானதற்கு காரணம் உறவுகள் தொடர்கதை பாடலால் தான்.

 ஆசையே காத்துலே தூது விட்டேன் மூலம் இன்று வரை சுபாஷினி மக்கள் மனதில் நிலைத்து நிற்கிறார்.

 படாபட் ஜெயலட்சுமி என்றதுமே நம் நினைவுக்கு வருவது “நித்தம் நித்தம் நெல்லு சோறு” தான்.

 நடிகை ஷோபாவிற்கு “அடிப் பெண்ணே” பாடல் மிக பிரபலம்.

 Female Solo என்ற genreஐ மிக பிரமாதமாக கையாண்டவர் ராஜா மட்டுமே. இதற்கு தனி பதிவு போடுமளவிற்கு ராஜா கையாண்ட புதுமைகள் ஏராளம்.
நகைசுவை நடிகரான ஜனகராஜூக்கு “காதல் என்பது பொதுவுடைமை”  நிரந்தர அடையாளம்.

 அவ்வண்ணமே ஆறும் அது ஆழம் இல்ல பாடல் சந்திரசேகருக்கு அமைந்தது.

 நடிகர் S.P.B அவர்களுக்கு மண்ணில் இந்த காதல் அன்றி பாடலை கொடுத்தார் ராஜா.

 மலையாள நடிகரான காலஞ்சென்ற திலகன் இன்றும் ஒரு பாடலால் பேசப்படுகிறார் என்றால் அது உணருமீ கானம் மூலமே. 

சோமையாஜூலுவுக்கு கனவு காணும் வாழ்க்கை யாவும் பாடல்.


என் உயிர் தோழன் படத்தில் வரும் இப்பாடலால் மட்டுமே தென்னவன் என்ற நடிகர் இன்று வரை அடையாளம் காணப்படுகிறார்


மேற்சொன்ன நடிகர்கள் இன்று வரை மக்கள் மனதில் சட்டென பாடல்கள் மூலம் நினைவுக்கு வர காரணம் இசை ஞானி இசையமைத்த  சாகா வரம் பெற்ற பாடல்களில் இடம்பெற்றதால் தான். இப்பாடல்களில் நான் சொன்ன பெரும்பான்மையான நடிகர்கள் அவர்கள் நடிப்பு திறனால் பேசப்படவில்லை. ராஜாவின் பாடலே இவர்களை பேச வைத்தது, நிலைக்க வைத்தது. நாளை இவர்கள் எதாவது பேட்டியில் இடம் பெறுகிறார்கள்  அல்லது பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்கள் என்றால் இவர்களின் அடையாளமாக இப்பாடல்கள் ஒலிக்கும்.
மேலும் பிரபல நடிகர் எவருக்கேனும் 50 படங்களுக்கும் மேற்பட்டு பணியாற்றியவர் மற்றும் நூற்றுக்கணக்கில் பாடல்கள் தந்தவர் என்று இந்திய திரை வரலாற்றை  நோக்கினால் இசை ஞானி மட்டுமே கண்ணுக்கு தெரிவார். முரளி, கார்த்திக், ரஜினி, கமல், ராமராஜன்,மோகன் இந்தப் பட்டியலில் அடங்குவர். அதிலும் முக்கியமாக முரளி, கார்த்திக், ராமராஜன் போன்றோர் , ராஜாவின் பாடல்களால், அதிலும் அவர் குரலில் பாடிய பாடல்களால் தாம் பிரபலமடைந்தார்கள் என்றால் அது மிகையாகாது.
நடிகர்களால், இயக்குனர்களால் தயாரிப்பாளர்கள் உருவாக்கப்பட்ட வரலாறு உண்டு. ஆனால் ஒரு இசையமைப்பாளர் தயாரிப்பாளர்களை உருவாக்கினார் என்றால் அது சாத்தியப்பட்டது ராஜாவின் இசையால் தான். மேலும் ராஜாவின் இசையை மட்டுமே நம்பி வினியோகஸ்தர்கள் பலர் உருவான வரலாறு  தமிழ் திரையுலகில் தான் உண்டு. மேலும் சில வினியோகஸ்தர்கள் தயாரிப்பாளர்களாய் மாறியதும் ராஜாவால் தான். இவர்களின் பட்டியல் மீக நீளம். உதாரணமாக கே.பி. பாலு (சின்ன தம்பி தயாரிப்பாளர்), டி. சிவா போன்றோரை சொல்லலாம். இது போன்ற ஒரு நிகழ்வு உலக சினிமாவிலேயே கிடையாது. மேலும் ஹீரோக்களை தோற்றுவித்த ஒரு இசையமைப்பாளர் என்ற பெருமையை ராஜாவே பெறுகிறார். முரளி, கார்த்திக், ராஜ்கிரண், மோகன், ராமராஜன் போன்றவர்கள் கதாநாயகர்களாய் வலம் வந்தார்கள் என்றால் அதற்கு ராஜாவின் இசையன்றி வேறேதுவும் காரணம் இல்லை. 
ஒலிப்பேழையில் வெறும் 1:56 நிமிடங்கள் மட்டுமே வரும் “ஒத்தை ரூபாய் தாரேன்” பாடல் நாட்டுப்புற பாட்டு என்ற படத்திற்கு பெரும் விளம்பரமாக செயல்பட்டதுமன்றி இன்று வரை அப்படத்திற்கு அதுவே அடையாளமாக இருக்கிறது.

இவ்வளவு ஏன் 1991ஆம் ஆண்டு வெளிவந்த படமான தளபதியில் இடம்பெறும் ராக்கம்மா கையை தட்டு பாடலின் இறுதியில் வரும் “குனித்த புருவமும் கொவ்வை செவ்வாயும்” வரிகள் அப்போதைய 10ஆம் வகுப்பு தமிழ் பாடத்தில் மனப்பாட பகுதியாக இருந்தது அப்பாடலால் என்னுடைய பல நண்பர்கள் ராஜாவால் தான் பொதுத் தேர்வில் அப்படியே பத்து மதிப்பெண் எடுத்தேன் என்று மகிழ்ச்சியுடன் சொல்ல கேட்டிருக்கிறேன்.
பொங்கலையும், ஆங்கிலப் புத்தாண்டையும் கதாபாத்திரங்களாய் எடுத்துக் கொண்டால் கூட தமிழகத்தில் அவற்றிற்கென பிரத்யேக பாடல்கள் கொடுத்து,


 இன்று வரை ஊடகங்கள், கச்சேரிகள், பொது நிகழ்ச்சிகள் போன்றவற்றில்  இப்பண்டிகைகள் இந்தப் பாடல்களைக் கொண்டே கொண்டாடும் வகையில் நிலையான சிறப்பு தன்மை வாய்ந்ததாக படைத்த பெருமை இசை ஞானியையே சேரும். 


முத்தாய்ப்பாக சொன்னால் முகம் தொலைந்தவர்களுக்கும் முகவரி தந்த மாண்பு இசை ஞானியை தான் சாரும்

4 comments:

  1. Arumayana katturai, anaivarum therinthu kollavendiya katturai.
    Actor Murali avl..irappatharkku munnal kalanthu konda BANA kathadi audio release functionil..raja sir avarukku theivam endru..avaralthan than intha alavukku vazharnthen endru migavum nandri unarchiyudan koori irunthar..idhu avarin sathiya vakkumoolam...
    avaral vazharntha anaivarum thangal irappatharkku mun intha mathiri oru statement nitchyamaga solvargal..

    ReplyDelete
    Replies
    1. பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி திரு. குமார் அவர்களே. உங்களை போன்றோர் தரும் உற்சாகமும் ஊக்கமுமே என்னை எழுத வைத்துள்ளது.

      Delete
  2. அப்போதைய 10ஆம் வகுப்பு தமிழ் பாடத்தில் மனப்பாட பகுதியாக இருந்தது அப்பாடலால் என்னுடைய பல நண்பர்கள் ராஜாவால் தான் பொதுத் தேர்வில் அப்படியே பத்து மதிப்பெண் எடுத்தேன் என்று மகிழ்ச்சியுடன் சொல்ல கேட்டிருக்கிறேன். /// என்னையும் சேர்த்து !!!

    ReplyDelete
  3. // Female Solo என்ற genreஐ மிக பிரமாதமாக கையாண்டவர் ராஜா மட்டுமே. இதற்கு தனி பதிவு போடுமளவிற்கு ராஜா கையாண்ட புதுமைகள் ஏராளம்//

    Please நேரம் கிடைக்கும்போது இந்த தலைப்பிலும் ஒரு பதிவு போடுங்கள்.

    ReplyDelete