யுவன் ஏன் கொண்டாடப்பட வேண்டும்?
இன்றைய இளம் இசையமைப்பாளர்களை பட்டியலிட்டு, மிக சிறந்த திறமை, இசை ஆளுமை, இசை நுணுக்கங்கள் ஆகியவற்றை கணக்கில் கொண்டு அதில் பரிசு தர நாம் தயாரானால், முதல் பரிசு பெற தகுதியானவர் இளையராஜாவின் “இளைய” ராஜா யுவன் சங்கர் ராஜா தான் என்பதை நான் மிகவும் பெருமையுடன் சொல்வேன். சரி என்ன தான் சாதித்து விட்டார் இவர் என்ற கேள்விக்கு பதிலே இப்பதிவு!
ராஜாவிடம் இருக்கும் கடின உழைப்பு, அர்ப்பணிப்பு, வேகமாக செயலாற்றும் திறன், கூரிய இசையறிவு ஆகிய அனைத்தும் யுவனிடம் ஒரு சேர அமைந்திருப்பது அவரது பலம். தன்னுடைய தந்தையின் பெருமையை பலர் அறிந்திருந்தாலும், இன்றைய இளஞ்சிறார்கள், யுவன் யுவதிகள் ஆகியோரிடத்து ராஜாவின் இசையறிவை கொண்டு சேர்த்ததில் யுவனின் பங்கு மகத்தானது என்று சொன்னால் அது மிகையன்று. குறிப்பாக 1990களில் பிறந்த குழந்தைகளுக்கு நல்ல இசையென்றால் எது என்று தெரியாமலேயே இருந்தது. புது இசை வடிவம் என்று சொல்லி இவர்களுக்கு புகுத்தப்பட்டதெல்லாம் நஞ்சு அன்றி வேறு இல்லை. இனிமையான இசை இவர்களுக்கு வாய்க்கவில்லை. பொருளாதார தாராளமயமாக்கல் காரணமாக இந்தியாவிலும், தமிழகத்திலும் புகுந்த பல சங்கதிகளில், புற்றீசலென வந்த ஊடகங்களும் அடக்கம். நல்ல
இசை என்றால் M TVயில் வரும் இசை மற்றும் Rap மட்டும் தான் போல என்ற மாயையை இளைஞர்களிடத்து புகுத்தியது இவ்வூடகங்கள்தாம். அப்போது தமிழகத்திலும் அந்த தாக்கம் மெல்ல மெல்ல பரவியது. அருமையான, இனிமையான, மனதை நல்வழிப்படுத்துகிற, சாந்தம் உருவாக்குக்கிற இசையை ராகதேவன் தந்து கொண்டு தான் இருந்தார். ஆனால் இவ்வூடகங்கள் திட்டமிட்டு இவரது இசையை இளந்தலைமுறையினரிடம் கொண்டு சேரா வண்ணம் நடந்து கொண்டன. ”தென்றல்” தான் இனிமை என்று காலங்காலமாக இலக்கியங்களிலும், கவிதைகளிலும் சொல்லப்பட்டு வந்த கருத்துக்கு எதிர்மாறாக புயல் தான் சிறந்தது என்ற கருத்து வலுக்கட்டாயமாக மக்கள மனதில் திணிக்கப்பட்ட து. பாவம், என்ன செய்வார்கள் இளைஞர்கள்? புயலால் பேரழிவு தான் என்ற உண்மையை அவர்களுக்கு எடுத்து சொல்ல யாருமில்லை, சொன்னாலும் செவிசாய்க்கவும் அவர்கள் தயாராக இல்லை. படு கேவலமான அலைவரிசையில் அமைக்கப்பட்ட, மனம் மாசுப்படுகிற தன்மை கொண்ட இசையை ஊடகங்கள் அவர்கள் மீது திணித்தன. சுற்றுச்சூழல் மாசுபடுவதால் ஏற்படும் தீமைகள் போல், மனம் மாசுபடுவதால் உண்டாகும் கொடுமைகளும் ஆபத்தானவை. இப்படிப்பட்ட சூழலில் தான் 1996ல் யுவனின் இசை அறிமுகம் ஆனது. அரவிந்தன் படத்தில் வரும் “ஈர நிலா” பாடல் மூலம் எல்லோரையும் கவனிக்க வைத்தார். பாடல்கள் மட்டுமல்லாமல் பின்னணி இசையாலும் இவர் ஈர்த்தார். எந்த இளைஞர் பட்டாளம் மட்டமான இசையால் வயப்பட்டிருந்ததோ, அதே இளைஞர் கூட்டத்தை தன்னுடைய இலக்காக கொண்டு இவர் இசையமைத்தார். 2000 ஆண்டிலிருந்து மெல்ல மெல்ல இவரது ராஜ்யம் விரிவடைந்தது, இப்போது தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு சிம்மாசனத்தை அமைத்து கொண்டிருக்கிறார்.
ராஜாவின் பின்னணி இசை திறமையை உலகறியும். ஆனால் அவரது திறமையான இசை, அவரது ரசிகர்கள் என்று அறியப்பட்ட நடுத்தர வயதினரிடம் மட்டும் சென்று அடைந்தது. அவரது இசை, இளைஞர்களில் பெரும்பான்மையானோரிடம் சென்று சேரவில்லை. இப்படிப்பட்ட சூழலில் யுவன் தன்னுடைய படங்களில் ராஜாவின் காலத்தால் அழிக்க முடியாத பாடல்கள், Theme Music ஆகியவற்றை புகுத்தினார்.
திரிஷா, ஆர்யா நடித்த சர்வம் திரைப்படத்தில், ராஜாவின் சாகா வரம் பெற்ற ” பல்லவி அனு பல்லவி” மற்றும் ”வாழ்க்கை” படத்தில் வரும் “மெல்ல மெல்ல வந்து” பாடல் இசையை யுவன் பயன்படுத்தினார். அந்த பின்னணி இசை, பின்னர் பெரும்பாலான mobile phoneகளில் caller tuneஆக மாறியது. அந்த இசை ராஜாவால் உருவாக்கப்பட்டது என்று தெரிந்த பின் இளைஞர்களுக்கு ராஜா இதையெல்லாம் பல ஆண்டுகளுக்கு முன்பே செய்திருக்கிறாரா என்ற ஆச்சரியம் ஏற்பட்டது.
http://www.youtube.com/watch?v=UPzCxvVPiFE
http://www.youtube.com/watch?v=UPzCxvVPiFE
பின்பு
2010ல் வெளிவந்த “தீராத விளையாட்டுப் பிள்ளை” படத்தில் ராஜாவின் “நெற்றிக் கண்” படத்தின் Theme
Musicஐ பயன்படுத்தி, ராஜாவை இன்றைய இளைஞரிடத்து “பாருங்கடா, என் அப்பா எவ்வளவு பெரிய இசை மேதை” என்று முழங்கினார்.
http://www.youtube.com/watch?v=YOcwBe7_Dhg
http://www.youtube.com/watch?v=YOcwBe7_Dhg
சத்தம் போடாதே படத்தில் “ How to Name
It” இசைக் கோவையை பயன்படுத்தினார்.
7ஜி ரெயின்போ காலனி படத்தில் “ஆசையை காத்துலே தூது விட்டேன்” பாடலை பயன்படுத்தினார்.
http://www.youtube.com/watch?v=zCx5EGaTomU
http://www.youtube.com/watch?v=zCx5EGaTomU
சென்னை
600028 படத்தில் பொத்தி வைச்ச மல்லிகை மொட்டு பாடலை பயன்படுத்தினார்.
http://www.youtube.com/watch?v=GcBd4AzQxa0
http://www.youtube.com/watch?v=GcBd4AzQxa0
சரோஜா படத்தில் ஆயிரம் தாமரை மொட்டுக்களே பாடலையும், ”கோவா”வில் அட மச்சான் மச்சான் பாடலில் இடம்பெறும் “நாதிரின்னா, நாதிரின்னா” என்ற Bitஐ பயன்படுத்தினார்.
http://www.youtube.com/watch?v=-bado44xUR8
http://www.youtube.com/watch?v=-bado44xUR8
இவை சில உதாரணங்களே. அவருடைய பல படங்களில் ராஜாவின் பாடல்களையும், புகழ் பெற்ற பின்னணி இசைக் கோவைகளையும் யுவன் இன்றைய தொழில் நுட்பத்தை பயன்படுத்தி அவற்றிற்கு மேலும் மெருகூட்டினார்.
இவையெல்லாம் யுவனால் மட்டும் தான் உலகுக்கு தெரிந்ததா, யுவனால் அடையாளம் காட்டப்பட வேண்டிய நிலையிலா ராஜா உள்ளார் என்று உங்களிடத்தில் எழும் கடுங்கோபமான கேள்வி எனக்கு புரிகிறது. நண்பர்களே, நான் அப்படி சொல்லவில்லை, ஆனால் இப்படிப்பட்ட அருமையான பாடல்கள் , இசை அமுதங்கள் 1990களுக்குப் பின் பிறந்த பெரும்பாலோனாருக்கு தெரியாதிருந்தது. சிலருக்கு தெரிந்திருந்தது என்றால், அச்சிலரின் பெற்றோர் தான் காரணம். அவர்களின் பெற்றோர், தம் பிள்ளைகளை ஆரோக்கியமான சூழலில் வளர்த்திருக்கிறார்கள் என்பது தான் காரணம். நான் சொல்வது மிகையன்று. நான், சில ஆண்டுகளுக்கு முன், சில நண்பர்களோடு ஒரு தனியார் தொலைக்காட்சியில் ராஜா சம்பந்தப்பட்ட இசை நிகழ்ச்சிக்கு சென்றிருந்தபோது, அந்நிகழ்ச்சியின் ஒலி/ஒளிப்பதிவிற்கு வந்திருந்த இளம் பாடகி, நாங்கள் பாடவிருந்த பாடல்களை கேட்டு விட்டு, இதையெல்லாம் நான் கேட்டதேயில்லை என்று கூற எனக்கு மிகுந்த வருத்தமே மேலோங்கியது. இளைஞர்கள் என்று இல்லை, ராஜா ரசிகர்களாய் நெடுங்காலமாக இருக்கும் சிலருக்கும் கூட அவருடைய “பிச்சை பாத்திரம்” பாடல் நான் கடவுள் படம் வந்த பின் தான் தெரிந்தது. அவர் அப்பாடலை 1996-97லியே ரமண மாலை ஆல்பத்தில் பாடியுள்ளார்.
ஆனால் இன்றைக்கு நிலை மாறியுள்ளது. ராஜாவின் இத்தகைய சிற்சில பாடல்களை கேட்ட பின்பு, இளைஞர்கள் ராஜாவின் ஏனைய இசை அமுதங்களை, download செய்தாவது கேட்கின்றனர். யுவனின் Trendஐ பின்பற்றி சுப்ரமணியபுரம் படத்தில் “சிறு பொன்மணி அசையும்” பாடலை இயக்குனர் சசிகுமாரும், பசங்க படத்தில் “காளிதாசன், கண்ணதாசன்” பாடலை இயக்குனர் பாண்டிராஜும் பயன்படுத்தினர். சிறு பொன்மணி அசையும் பாடல், சுப்ரமணியபுரம் படத்தின் காதல் காட்சிகளுக்கு எத்தகைய இனிமையை கொடுத்தது என்பதை படம் பார்த்தவர்கள் உணர்ந்திருப்பர். அப்பாடல் பல Mobile
Service Providerகளின் Caller Tune
listல் சேர்க்கப்பட்ட தும் அதற்கு பின்பு தான்.
திரு.
M.S.V, திரு. கே.வி. மகாதேவன் போன்றோரின் மைந்தர்கள் திரையுலகில் பிரவேசிக்கவில்லை, அதனால் தான் அவர்களுடைய முத்தான முத்தான பாடல்கள் இன்றைய இளைஞர்களுக்கு தெரியவில்லை. அப்படியே தெரிந்திருந்தாலும் சில குறிப்பிட்ட பாடல்கள் மட்டுமே தெரியுமேயன்றி மற்ற பிற பாடல்கள் தெரிந்திருக்க நியாயமில்லை. யுவன் போன்று அவர்களுக்கும் ஒரு மைந்தன் கிடைத்திருந்தால், அவர்களின் பாடல்கள் எத்தகைய சிறப்பு தன்மை வாய்ந்தவை என்று இன்றைய தலைமுறையினருக்கு தெரிந்திருக்கும். திரு.எம்.எஸ்.வி பற்றி ராஜாவை தவிர யாரும் இப்போதெல்லாம் பேசுவதில்லை. ஏன், அவரோடு பணியாற்றிய இயக்குனர்களும் கூட பேசுவதில்லை 1992ல் இருந்து நம்முடைய புலனுக்கு சம்பந்தமில்லாத இசையெனும் பெயரால் நஞ்சை பருகி வரும் இளைஞர்களுக்கு அமுதத்தை அளிக்கும் பணியை செய்யும் மகத்தானவர் யுவன் சங்கர் ராஜா அவர்கள்.
யுவனோடு எதிர்காலத்தில் கார்த்திக் ராஜா மைந்தன் யதிஷ்வர் கூட இசைப்பணியில் ஈடுபடும்போது ராஜாவின் இசை பல தலைமுறைகளை கடந்து நிற்கும் என்பது திண்ணம்.
இப்பதிவு உங்களுக்கு கோபத்தை உண்டாக்குவதற்கு எழுதப்பட்டதல்ல. நான் இசைத்தட்டு, ஒலி நாடா விற்பனையில் பல காலம் இருப்பதால், பல வாடிக்கையாளர்களோடு பழகுவதால் இன்றைய வெகுஜன ரசனையின் நாடித்துடிப்பே இப்பதிவு.
யுவனோடு எதிர்காலத்தில் கார்த்திக் ராஜா மைந்தன் யதிஷ்வர் கூட இசைப்பணியில் ஈடுபடும்போது ராஜாவின் இசை பல தலைமுறைகளை கடந்து நிற்கும் என்பது திண்ணம்.
இப்பதிவு உங்களுக்கு கோபத்தை உண்டாக்குவதற்கு எழுதப்பட்டதல்ல. நான் இசைத்தட்டு, ஒலி நாடா விற்பனையில் பல காலம் இருப்பதால், பல வாடிக்கையாளர்களோடு பழகுவதால் இன்றைய வெகுஜன ரசனையின் நாடித்துடிப்பே இப்பதிவு.
இதற்கெல்லாம் அத்தாட்சியாக
23/12/2012 அன்று கோவையில் நடந்த இசை கலந்துரையாடல் நிகழ்ச்சியில் ராஜாவே, K.V. Mahadevan, M.S.V, Ilaiyaraja listல் அடுத்து வருபவர் யுவன் என்று தெரிவித்தார். சுருக்கமாக சொன்னால் ராஜாவின் இசையை இன்றைய சிறார்க்கு, தலைமுறைக்கு எடுத்து சென்றவர் யுவனே!!!
testing the frequency
ReplyDeletesabas sabas
ReplyDelete